மனநல பிரச்சினைகள் அதிகரித்து வரும் சூழலில் டார்க் தெரபி என்ற புதிய சிகிச்சை முறை கவனம் பெறுகிறது. இந்த தெரபியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முழுமையான இருள் சூழல் ஏற்படுத்தப்படுகிறது. அதிக வெளிச்சம் மற்றும் மொபைல் திரை பயன்பாட்டால் பாதிக்கப்படும் மனநிலையை சரிசெய்ய இது உதவுகிறது. உடலின் இயற்கை தூக்க சுழற்சி சீராகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் குறைந்து கவனம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அனைவருக்கும் இது பொருத்தமானதாக இருக்காது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக மனநல மருந்துகள் பயன்படுத்துபவர்கள் மருத்துவர் ஆலோசனை அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.