[‘தூத்துக்குடி எட்டயபுரம் அருகே 17 வயது சிறுமிக்கு தீ வைப்பு.’, ‘பேச மறுத்த ஆத்திரத்தில் காதலன் சந்தோஷ் செய்த கொடூரச் செயல்.’, ‘3 ஆண்டுகளாக பழகி வந்த நிலையில் பெற்றோர் கண்டிப்பால் பிரிந்த சிறுமி.’, ‘குற்றவாளி சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையாவை போலீசார் கைது செய்தனர்.’, ‘படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.’]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமி மீது மண்ணெணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சந்தோஷ், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமிக்கு 14 வயதாக இருந்தபோதே தொடங்கிய இந்த விவகாரம், சமீபத்தில் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் கண்டித்ததால், அந்தச் சிறுமி சந்தோஷுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். மேலும், அவர் தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது நண்பர் முத்தையாவுடன் தூத்துக்குடிக்குச் சென்று சிறுமியைச் சந்தித்துள்ளார். மீண்டும் தன்னிடம் பேசுமாறு வற்புறுத்திய சந்தோஷ், சிறுமி பிடிவாதமாக மறுக்கவே, மறைத்து வைத்திருந்த மண்ணெணெயை ஊற்றி சிறுமிக்கு தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகிய சிறுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையாவை அதிரடியாகக் கைது செய்தனர். சினிமா மோகத்தால் இளைய தலைமுறை திசைமாறுவதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
Topics: ##Thoothukudi ##CrimeNews ##TamilNadu ##LoveCrime ##PoliceArrest
