[‘தூத்துக்குடி அருகே 17 வயது சிறுமியை தீவைத்து எரிக்க முயன்ற கொடூரம்.’, ‘3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், பேச மறுத்ததால் இந்த விபரீத முடிவு.’, ‘பாதிக்கப்பட்ட சிறுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.’, ‘தலைமை குற்றவாளி சந்தோஷ் மற்றும் அவனது நண்பர் முத்தையாவை காவல்துறை கைது செய்தது.’, ‘சிறுவயதுக் காதலின் விபரீத விளைவைச் சுட்டிக்காட்டும் அதிர்ச்சி சம்பவம்.’]
தூத்துக்குடி மாவட்டத்தில் காதலைத் தவிர்த்த 17 வயது சிறுமி மீது மண்ணெணெய் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காதலன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள். கணவரைப் பிரிந்து வாழும் இவர், தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது 17 வயது மகள், பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமிக்கு 14 வயதாக இருந்தபோதே இந்த விவகாரம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் மகளைக் கண்டித்துள்ளனர். இதனால் சந்தோஷுடன் பேசுவதை அந்தச் சிறுமி தவிர்த்து வந்துள்ளார். மேலும், பாதுகாப்பு கருதி சிறுமியை அவரது பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது நண்பர் முத்தையாவுடன் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அங்கு சிறுமியிடம் தன்னை மீண்டும் காதலிக்குமாறும், பேசும்மாறும் வற்புறுத்தியுள்ளார். அதற்குச் சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, மறைத்து வைத்திருந்த மண்ணெணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையாவை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபரம் அறியாத வயதில் ஏற்படும் காதலால் விளையும் விபரீதங்கள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
Topics: ##Thoothukudi ##CrimeNews ##TamilNadu ##PoliceArrest ##SafetyAlert
