அ.தி.மு.க. ஊழலால் பா.ஜ.க.விடம் சரண்: ராகுல் காந்தி காட்டம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை ஊழல் காரணமாக பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் திராவிட அடையாளத்தைப் பா.ஜ.க. சிதைக்க அ.தி.மு.க. ஒரு கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
