வெப்ப அலை தீவிரம்: தமிழ்நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியது
தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களுக்கும் மேல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை எட்டியுள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
