[‘அதிமுகவின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.’, ‘டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி சம்மதித்தால் அதிமுகவில் இணையத் தான் தயார் என்று கூறியுள்ளார்.’, ‘2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒற்றுமை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.’, ‘தனிக்கட்சி தொடங்குவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.’, ‘கடந்த தேர்தலில் ராமநாதபுரத்தில் தனக்கு எதிராக நடந்த சதி குறித்தும் அவர் பேசியுள்ளார்.’]
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் மீண்டும் இணையத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று குறிப்பிட்ட அவர், ‘அம்மா (ஜெயலலிதா) இருந்தபோது இருந்த அதே வலுவான அதிமுகவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் போராட்டம். அதிமுகவில் இணைய நான் தயடி. டிடிவி தினகரனும், அவரது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் இதற்குத் தயாராக இருக்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் தனது பெயரிலேயே ஆறு பேரை சுயேட்சையாக நிறுத்தி தன்னை வீழ்த்தச் சதி நடந்ததாகக் குறிப்பிட்ட ஓபிஎஸ், தற்போது டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே 2026-ல் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். புதிய கட்சி தொடங்குவது குறித்தோ அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Topics: #ஓ.பன்னீர்செல்வம் #எடப்பாடிபழனிசாமி #அதிமுக #டிடிவிதினகரன் #2026சட்டமன்றத்தேர்தல் #தமிழகஅரசியல் #OPS #EPS #AIADMKMerger
