தென்னிந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை, பெரிய அளவிலான உள்கட்டமைப்பு முதலீடுகளால் பெரும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக ரயில் மற்றும் மெட்ரோ திட்டங்கள் போன்றவை ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சொத்து விலைகளை கணிசமாக உயர்த்தும். இந்திய அரசு 2022 முதல் 2026 வரை 520-560 பில்லியன் டாலர் மூலதனச் செலவை உள்கட்டமைப்புக்கு ஒதுக்கியுள்ளது. இதில் நான்கில் ஒரு பகுதியான 130 பில்லியன் டாலர் தென்னிந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு, பெங்களூரு-ஹைதராபாத், பூனே-ஹைதராபாத் அதிவேக ரயில் காரிடார்கள், நெடுஞ்சாலைகள், மெட்ரோ விரிவாக்கம், லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க் ஆகியவை பொருளாதார செயல்பாட்டை விஸ்தரிக்கும். ஹைதராபாத் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுகிறது. பெங்களூரு-ஹைதராபாத் அதிவேக ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், IT மற்றும் தொழில்துறை காரிடார்கள் சொத்து முதலீட்டை ஈர்க்கின்றன. 2026-ல் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை சந்தைகள் உயர் நிகர மதிப்பு முதலீடு