தமிழகத்தின் 16-வது சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில், சுமார் 4,023 வேட்பாளர்கள் தங்கள் அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் களத்தில் உள்ளனர்.வாக்குப்பதிவு நிலவரம்தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.கட்சித் தொடங்கிய பின் முதல்முறை: விஜய் வாக்களிப்புஇந்தத் தேர்தலின் முக்கிய ஈர்ப்பாகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கட்சி தொடங்கிய பிறகு அவர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், அரசியல் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.வாக்களித்து முடித்த பின் வெளியே வந்த அவர், தனது விரலில் வைக்கப்பட்ட மை-யைக் காண்பித்து ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்தினார். பின்னர், அங்கிருந்த முதியவர்களிடம் சிறிது நேரம் இன்முகத்துடன் கலந்துரையாடினார்.நெகிழ்ச்சி சம்பவம்விஜய் வாக்களிக்க வந்தபோது, அவரைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் வாக்குச்சாவடி முன் திரண்டனர். கூட்ட நெரிசலுக்கு இடையே, கீழே விழுந்த ஒருவரது செல்போனை நடிகர் விஜய் நேரில் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
