பிற மாநிலங்களுக்கு ஜல்லி எம் சாண்ட் கொண்டு செல்ல தடை தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்ற கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

